search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்ணூர் விபத்து"

    எண்ணூரில் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை லாரி மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருவொற்றியூர்:

    எண்ணூர், சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் ராகேஷ் (வயது 26). இவருக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று இரவு அவர் காசிமேட்டில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

    எர்ணாவூர் ரவுண்டானாவில் வந்த போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராகேஷ் பலியானார். இது தொடர்பாக மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருவண்ணாமலையை சேர்ந்த லாரி டிரைவர் சதீஷ்குமாரை கைது செய்தனர். #Tamilnews
    ×